அரசு பள்ளியில் வெள்ளி விழா

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-03-16 14:58 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்    வெள்ளிவிழா நடந்தது.  தலைமை ஆசிரியை கோமதி ஆண்டறிக்கை வாசித்து, தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  தட்டான்குட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பா, நாச்சிமுத்து, பங்கேற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Similar News