கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதிகளில் போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட அருணாபுரம் சேர்ந்த சீனிவாசன்(54) என்பவரை திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கொண்ட போலீசாரால் இன்று அதிரடி கைது. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.