குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை பகுதியை சேர்ந்தவர் கிளிநோஸ் மகன் பனிஅடிமை (36). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள வள்ளி ஆற்றின் படித்துறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் பனிஅடிமையை மீட்டு சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்டி பனியடிமை நேற்று இரவு இறந்தார். இது குறித்து அவருடைய அண்ணன் சகாய செல்வராஜ் என்பவர் மனவளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.