நள்ளிரவில் ரவுடி கொலை
மதுரையில் ரவுடி நேற்று நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்.;
மதுரை தனக்கன்குளம் அருகே உள்ள மொட்டைமலை வெங்கல மூர்த்தி நகரில் இரண்டாவது மனைவி வீட்டில் தங்கியிருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகிளாமர் காளிஸ்வரன் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை அருகே அரியமங்கலத்தைச் சேர்ந்த கிளாமர் காளிபிரபல ரவுடியான இவர் பல்வேறு கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மதுரை கீரைத்துறை, தெப்பகுளம் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிளாமர் காளி கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ளவெண்கல மூர்த்தி நகரில் தனது இரண்டாவது மனைவி மீனாட்சி வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று (மார்ச்.22) இரவு 9 மணி அளவில் மனைவி மீனாட்சியிடம் தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவெளியில் வந்த கிளாமர் காலி வீட்டில் இருந்து சிறிது தூரம் வந்தபோது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் கிளாமர் காளியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வந்த போது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தார். இருள் சூழ்ந்த பகுதி என்பதால் கொலை கும்பல் யார் என்ற அடையாளம் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த கிளாமர் காளியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.பல்வேறு குற்ற வழக்கு தொடர்புள்ள இவர் முன்னாள் திமுக மண்டல செயலாளர் வி கே குருசாமியின் ஆதரவாளர் என்பதும் பழிக்குப் பலியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.