நல்லம்பள்ளியில் கால்நடைகள் விற்பனை அமோகம்
நல்லம்பள்ளி செவ்வாய் வாரச்சந்தையில் 65 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக சந்தை நடக்கிறது. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏளன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று மார்ச் 25 சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் & வியாபாரிகள் விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் 3000 ரூபாய்க்கு துவங்கி 20,000 ரூபாய் வரை என 40லட்சத்திற்கும் , மாடுகள் 8000 முதல் 45000 வரை என 25 லட்சத்திற்கும் மாடுகளும் என மொத்தம் 65 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.