உலக காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!
வேலூரில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோகிணி தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியிருப்பு நல அலுவலர் இன்பராஜ், நெஞ்சகப்பிரிவு மருத்துவர் பிரபாகர், மற்றும் செவிலிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.