புலி தாக்கி ஒருவர் பலி

காவல்துறையினர் மற்றும் வனத்துறை தீவிர விசாரணை;

Update: 2025-03-27 11:55 GMT
  • whatsapp icon
உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் இன இளைஞர் பரிதாப பலி உடலை மீட்டு காந்தள் E1 காவல்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை.... நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கவர்னர் சோலை பகுதியில் தோடர் இன மக்கள் வசிக்கும் கல்லக்கொரை மந்து உள்ளது. இந்த மந்து பகுதியை சேர்ந்த கேந்தர் குட்டன் (42) என்பவர் நேற்று மாலை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்க்காக சென்றுள்ளார். இரவு முழுவதும் கேந்தர் குட்டன் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது கேந்தர் குட்டன் புலி தாக்கி பாதி உடம்பு சாப்பிட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் காவல்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட வன கள இயக்குநர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் காவல்த்துறையினர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News