கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு.
கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு.;
கரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி அருகே சங்கரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி வயது 47. பழனியம்மாள் என்பவருக்கும் இவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 3- ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, தற்போது சின்னசாமிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த பழனியம்மாள், தனது கணவனிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, பழனியம்மாளை அடித்து,உதைத்து, துன்புறுத்தி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பழனியம்மாள், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சின்னசாமி மீது மனைவியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.