கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.;

நாமக்கல் மாநகராட்சி, மாரியம்மன் கோவில் தெரு, கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது, இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ல் தொடங்கப்பட்டு 89 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்க்காக விழா காலங்களில் 30% வரைஅரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் கலம்காரி காட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ்-ல் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், காட்டன் சட்டைகள், லினன் சட்டைகள் மற்றும் அச்சிடப்பட்ட சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபில்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், பிரிண்டட் படுக்கை விரிப்புகள் மற்றும் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும் மற்றும் வருடாந்திர முடிவு விற்பனைக்காகவும் தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில்அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ.300/-முதல் ரூ.3,000/- வரை சேமித்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 11 மாத சந்தா தொகையை அங்கத்தினர் செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். தற்போது நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கதவு எண் 46-A, மாரியம்மன் கோவில் தெரு, நாமக்கல்-637 001. தொலைபேசி எண். 04286-291846 இயங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கே.எம்.கோபி, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் பெ.செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.