திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகையை முடித்து மோட்டார் சைக்கிளில் சென்ற

பள்ளி- கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி இறந்தனர்;

Update: 2025-03-31 13:11 GMT
நாகை மாவட்டம் திட்டச்சேரி புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது உஸ்மான் மகன் முகமது தெளபிக் (19). இவர் நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திட்டச்சேரி புடவைகாரத் தெருவை சேர்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ் (13). இவர் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் நேற்று காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரமலான் தொழுகையை முடித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை முகமது தௌபிக் ஓட்டி உள்ளார். மோட்டார் சைக்கிள் திட்டச்சேரி மெயின் ரோடு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தெளபிக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவன் முகமது பாரிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் முகமது பாரிஸை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலறிந்த, திட்டச்சேரி போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ரமலான் தொழுகைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 2 மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Similar News