கடலூர்: வழிப்பறி வழக்கில் ஒருவர் என்கவுண்டர்

கடலூரில் வழிப்பறி வழக்கில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை;

Update: 2025-04-02 12:12 GMT
கடலூர்: வழிப்பறி வழக்கில் ஒருவர் என்கவுண்டர்
  • whatsapp icon
கடலூர் மாவட்டத்தில் உள்ள எம். புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும் அவர் மீது 33 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Similar News