பிளஸ் ஒன் மாணவி மாயம். தாய் புகார்.

மதுரை அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-04-04 04:43 GMT
பிளஸ் ஒன் மாணவி மாயம். தாய் புகார்.
  • whatsapp icon
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிகுடி தாலுகா பேய்குளம் கிழக்கு தெருவில் வசிக்கும் ஸ்ரீராம் என்பவரின் 17 வயது மகள் கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இவர் கடந்த 27 ஆம் தேதி கடைசி பொதுத் தேர்வுக்கு செல்வதாக கூறி காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் தேர்வு எழுதிவிட்டு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று ( ஏப்.3) இவரது தாயார் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News