தாய், மகள் கொலை வழக்கில் மூன்று பேருக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.;

Update: 2025-04-05 07:40 GMT
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான எட்டயபுரம், மேலநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான முனீஸ்வரன் (24), மகேஷ் கண்ணன் (28) மற்றும் எட்டயபுரம், தாப்பாத்தி பகுதியை சேர்ந்த வேல்முருகன் (22) ஆகிய மூவரையும் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News