ஐடிஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

மதுரை அருகே தாய் திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2025-04-08 03:18 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (18) என்பவர் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். இவர் வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதில் இவருக் கும், சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இவரது தாய் தலையிட்டு சந்தோஷை திட்டியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சந்தோஷ் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News