சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் கந்தம்பட்டி பைபாசில் உள்ள லாரி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.