மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் பத்தாம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது
மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் பத்தாம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது;

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி, மகாவீரர் ஜெயந்தி தினமான 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA மற்றும் FL11 மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (License and Permit) Rules, 1981-ன்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.