திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி - விவசாயிகள் தீவிரம்

பருத்தி சாகுபடி கை கொடுத்தால் தொடர்ந்து ஈடுபட விவசாயிகள் முடிவு;

Update: 2025-04-09 08:49 GMT
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் முப்போகம் நெல் சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் நெல் சாகுபடி பொய்த்து போனது. இந்நிலையில். குறைந்த அளவு தண்ணீரில் வளர கூடிய பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டனர். இதனையடுத்து, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து, திருமருகல் ஒன்றியத்தில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், பண்டாரவாடை, தென்பிடாகை, கீழகரையிருப்பு, மேலகரையிருப்பு, மருங்கூர், சீயாத்தமங்கை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பூதனூர், போலகம், குருவாடி, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், ஆலத்தூர், இடையாத்தங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், கணபதிபுரம், பொறக்குடி, அம்பல், கொங்கராயநல்லூர், ஏர்வாடி, கோட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளது. நெல் சாகுபடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடியில் போதிய மகசூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பருத்தி சாகுபடியிலாவது அதிக மகசூல் கிடைக்குமா? எனவும், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பருத்தி சாகுபடி கை கொடுத்தால், தீவிரமாக பருத்தி சாகுபடியில் தொடர்ந்து ஈடுபடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Similar News