தோகைமலையில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-04-10 01:28 GMT
கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தோகைமலையில் நேற்று நடைபெற்றது. தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணை அமைப்பாளர் ராமன், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிரபு குமார், மலைவேல், ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார் ராஜலிங்கம், ரமேஷ் குமார், வேணு, வினித், பால்ராஜ், முருகேசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளிலும் முகாம் செயற்குழு கூட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திய முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வருகின்ற 13 ஆம் தேதி நன்றி தெரிவித்தல் கூட்டம் நடத்துதல், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளில் அனைத்து பகுதிகளிலும் புரட்சியாளர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுதல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகாரம் பெற்று பானை சின்னத்தை வென்றெடுத்ததை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக வருகின்ற மே மாதத்தில் தோகைமலையில் அரசியல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் மேல்நிலைப் பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலோடு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு அழைப்பாளராக அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News