பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைதீர் கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், எஸ்.பி. ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதில், 40 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.