வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம்
போராட்டம்;
இந்திய அரசியல் சாசனத்தில், சிறுபான்மை மக்களின் நலனைப் புறக்கணித்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை சிதைக்கும் ஆர்எஸ்எஸ், ஒன்றிய பாஜக நவ பாசிச அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் முழக்கப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் தஞ்சை மாநகரம், தஞ்சை ஒன்றியம் சார்பில், தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, இ.வசந்தி, சி.சரிதா, கு.சந்துரு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், உலமாக்கள் மவ்லவி எம்.ஹாஜா முகைதீன், மக்கா பள்ளி தலைவர் ஏ.ஜாகிர் உசேன், ரகுமானியா பள்ளி எஸ்.அபுசாலி, வல்லம் சேக் அகமது ரபீக், எம்.முகமது ரபீக், திருக்கானூர்பட்டி அப்துல் காதர் மற்றும் மாநகரக் குழு, ஒன்றியக் குழுத் தோழர்கள், தோழமை கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவர் வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பையா, மீனவர் நல வாரிய துணைத்தலைவர் ஏ.தாஜுதீன் மற்றும் கே.குத்புதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பெரியண்ணன், ஏ.இளங்கோ, பி.நவநீதம், எம்.மகேஸ்வரி, வி.நாகேந்திரன், ஆர்.மகாலிங்கம், ஏ.மேனகா, வி.நவநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பில், தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏ.அமானுல்லா, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஏ.அதிரை ஷேக் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் கவிஞர் களப்பிரன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் எம். அப்துல் சுக்கூர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஏ.ஷேக் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் ஹெச்.ஜெகபர் அலி, பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நலச் சங்கம் எம்.அப்துல் ஜபார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் ஒன்றியக் குழு தோழர்கள் கு.பெஞ்சமின், முருக.சரவணன், ஆர். ஞானசூரியன், ஆர். ஜீவானந்தம், மோரிஸ். அண்ணாதுரை, டி.சரோஜா, கே.பாலசுப்பிரமணியன், எம்.சாமிநாதன், எஸ். சுந்தரபாண்டியன், ஏ.மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.