மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு கூட்டம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகியோர் தலைமையில் மதுரை சித்திரை பெருவிழா-2025 முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று (ஏப்.20) நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.