சணப்பிரட்டி முடக்கு சாலை அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.

சணப்பிரட்டி முடக்கு சாலை அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.;

Update: 2025-04-23 08:45 GMT
சணப்பிரட்டி முடக்கு சாலை அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம். கரூர், வெண்ணமலை அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் வயது 55. இவர் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை 5:30-மணி அளவில் திருச்சி - கரூர் பழைய நெடுஞ்சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் சணப்பிரட்டி முடக்கு சாலை அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்த திருச்சி மாவட்டம், முசிறி, திருமலையூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 38 என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம், ஜெயசீலன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயசீலனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயசீலன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News