தொழிற்பேட்டை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

தொழிற்பேட்டை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.;

Update: 2025-04-23 09:35 GMT
தொழிற்பேட்டை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், குளித்தலை, பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் அருள் முருகன் வயது 39. இவர் ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 7:10 மணியளவில், திருச்சி -கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தொழிற்பேட்டை அருகே சென்றபோது, அதே சாலையில் கரூர், தொழில் பேட்டையை சேர்ந்த சுமன்தாஸ் வயது 27 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், அருள்முருகன் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருள்முருகனை மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருள் முருகன் அளித்த புகாரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுமன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News