கம்மநல்லூர் அருகே நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கம்மநல்லூர் அருகே நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.்;
கம்மநல்லூர் அருகே நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் அருகே உள்ள கம்மநல்லூர் குடி தெருவை சேர்ந்தவர் குமார் வயது 63. இவர் ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 7 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, கம்மநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், நடந்து சென்ற குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த குமாரின் மகன் மணிகண்டன் வயது 24 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சண்முகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.