உலக புத்தக தினத்தில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி

உலக புத்தக தினத்தில், குமாரபாளையம் பகுதியில் வாசிப்பு திறன் ஏற்படுத்த, புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது;

Update: 2025-04-24 11:56 GMT
உலக புத்தக தினத்தில், குமாரபாளையம் பகுதியில் வீதி வகுப்பறை ஏற்படுத்தி, மாணவ, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு, வாசிப்பு திறன் ஏற்படுத்த, புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல் நிகழ்ச்சி விடியல் ஆரம்பம் சார்பில் நடந்தது குமாரபாளையம் நாராயண நகர், காவேரி நகர், அபெக்ஸ் காலனி, கலைமகள் வீதி, ராஜா வீதி உள்ளிட்ட 10 இடங்களில் வாசிப்பு மையம் நடந்தது. புத்தகங்களின் அருமை பற்றியும், வாசிப்பை பற்றியும் பேசியவர்கள், நன்றாக கதை சொன்னவர்களுக்கு விடியல் பிரகாஷ் பரிசாக புத்தகங்களை வழங்கினார். நான் முதல்வன் திட்டத்தில் 54 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி வாசிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென பிரகாஷ் கூறினார். இதில் சண்முகம், அங்கப்பன், அன்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News