மஞ்ச மேட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை.

மஞ்ச மேட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை.;

Update: 2025-04-26 09:52 GMT
மஞ்ச மேட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் வயது 51. இவருக்கு கடந்த ஒரு வருட காலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் விரத்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த பரமசிவம், ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், அவரது வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த பரமசிவத்தின் மகன் முருகன் வயது 27 என்பவர்,தனது தந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த பரமசிவத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Similar News