சின்னமனூரில் இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-26 12:35 GMT
தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (65). இவர் நேற்று முன்தினம் சின்னமனூர் உத்தமபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பரமசிவம் மருத்துவமனைக்கு அழைத்தாலும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று (ஏப்.25) வழக்கு பதிவு.

Similar News