கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.25) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் மெட்டு சாலையில் செல்வராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.