திப்பணம்பட்டி நூலகத்தில் இன்று இலவச பயிற்சி வகுப்பு
நூலகத்தில் இன்று இலவச பயிற்சி வகுப்பு;
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால இலவச ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு வகுப்பு இன்று காலையில் (ஏப்.28) தொடங்குகிறது. அதுபோல் மே 31 வரை தினமும் காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும். 5 முதல் 10ம் வகுப்பு செல்லும் மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என ரவிச்சந்திரன், பாரதியார் வாசகர் வட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதில் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் வந்து படித்து பயன்படுத்த கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.