திருவேங்கடம் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள்
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகள்;
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறாக பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் வந்து உடனே பார்வையிட்டு பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.