குமரி மாவட்டம் வெள்ளியாவிளை பகுதியை சேர்ந்த டேவிட் (52). இவர் மீது திருட்டு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் டேவிட் கடந்த 15 ஆண்டுகளாக தலை மறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று டேவிட் வீட்டருகே உள்ள பரணி குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது பல வருடங்களாக தேடப்பட்ட டேவிட் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேவிட் காலையில் குளிக்கும்போது சகதியில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது போதையில் குளத்தில் இறங்கினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.