காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய காவல் ஆணையர்.
மதுரையில் விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை காவல் ஆணையர் வழங்கினார்.;
மதுரை மாநகர் அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் ஆசிக் அகமது என்பவர், கடந்த 30.03.2025 அன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது, வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்ப நலன் கருதி, நேற்று (21.05.2025) காவலர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் காவலரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கினார்கள்.