தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு
மதுரை அருகே தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் தெற்குத்தெரு வைச் சேர்ந்த பழனிவேலுவின் மகள் தனுஷா (15) என்பவர் பள்ளி மாணவி. இவர்க ளுக்கு சூரக்குளத்தில் வீடுஉள்ளது. வீட்டில் இரவு தக்காளிசாதம் சாப்பிட்டு தூங்கச் சென்ற தனுஷா வாந்தி எடுத்து மயங்கி யுள்ளார். உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷா நேற்று (மே.21) உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.