வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது வேன் மோதியதில் பலியானார்.;

Update: 2025-05-22 01:52 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குன்றம் கிழக்கு தெருவை சேர்ந்த சிராசுதீன் (75) என்பவர் திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திரு மங்கலம் அச்சம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் அய்யனார் (25) என்பவர் ஓட்டிச்சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் சென்ற சைக்கிளின் மீது மோதியதில் படுகாயமடைந்த சிராசுதீனை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மே.21) உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News