தளி அருகே விவசாயியை தாக்கியவர் கைது.
தளி அருகே விவசாயியை தாக்கியவர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள பி.பி.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ் (28) விவசாயியான. இதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (30) சம்பவம் அன்று ஹரிசிடம் மது வாங்க பணம் தருமாறு ஜெகன் கேட்டுள்ளார். அதற்கு ஹரிஸ் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெகன், ஹரிசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி புகாரின் பேரில் தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.