சங்கரன்கோவிலில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது
பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள சுரண்டை சாலையில் பணியாளர்களுக்கு பயன்பெறும் வகையில் 8 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.