பல்லடம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்
தடை விதிக்கப்பட்ட நேரங்களில் வாகனங்களை இயக்குவதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல்;
பல்லடம் கடைவீதியில், உழவர் சந்தை, தினசரி மார்க் கெட், வணிக வளாகங்கள் உள்ளது. இவற்றில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு, போலீசார் சரக்கு வாகனங்கள் இயக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் சில சரக்கு வாகனங்கள், போக்குவரத்து நேர கட்டுப்பாடுகளை மீறி தடை விதிக்கப்பட்ட நேரங்களில் கடைவீதிக்குள் வந்து சரக்குகளை இறக்குகின்றனர். இதனால், கடைவீதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது " கடைவீதியில் சரக்கு வாகனங்கள் இயங்க நேர கட்டுப்பாட்டை போக்கு வரத்து போலீசார் விதித்துள்ளனர். ஆனால் சரக்கு வாகனங்கள் அதனை பின்பற்றுவது இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் தடை விதிக்கப்பட்ட நேரங்களில் இயங்கும் சரக்கு வாகனங்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்