புளியம்பட்டி ஏரியில் மூழ்கி சிறுவர் உயிரிழப்பு.
புளியம்பட்டி ஏரியில் மூழ்கி சிறுவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் இமயவன் (13), தனது நண்பர்களுடன் புளியம்பட்டி ஏரியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இமயவன், நீரில் மூழ்கினான் நண்பர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.