தேன்கனிக்கோட்டை அருகே நெற்பயிரை நாசம் செய்த யானை.
தேன்கனிக்கோட்டை அருகே நெற்பயிரை நாசம் செய்த யானை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய ஒற்றை காட்டு யானை கொட்டபாலம், கீஜனகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. கீஜனகுப்பத்தில் உள்ள லட்சுமணன் விவசாயின் நிலத்தில் இருந்த நெற்பயிர்களை நாசம் செய்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் தளி வனப்பகுதிக்குள் விரட்டினர். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகயில் எதிர்பார்பாகா உள்ளது.