திண்டிவனம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவன் இறப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
திண்டிவனம், நல்லியகோடன் நகர், கோபால் தெருவைச் சேர்ந்த கேபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாஜலபதி, 16; இவர் திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தன்னுடைய நண்பர்களுடன், கர்ணாவூர் பாட்டையிலுள்ள தனியார் மனைப்பிரிவில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார். கிணற்றிலுள்ள முற்புதரில் சிக்கிய வெங்கடஜலபதி வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டார். உடனே திண்டிவனம் தீயணபை்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் நீரில் மூழ்கி இறந்த, மாணவரின் உடலை மீட்டு கொண்டு வந்தனர்.சம்பவம் குறித்து மாணவரின் தந்தை கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.