கிருஷ்ணகிரி: அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.
கிருஷ்ணகிரி: அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய அரசு ஐ.டி.ஐ.க்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் skilltraining.tn.gov.in இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு குறித்த விவரங்கள் பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.14 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வயது உச்சவரம்பின்றி விண்ணப்பிக்கலாம்.