ராமநாதபுரம் தேவாலய தேர் பவனி நடைபெற்றது
கமுதிஅருகே விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயத் திருவிழாவையொட்டி, தேர் பவனி நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள திருசிலுவையாபுரம் கிராமத்தில் 90 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர், தினமும் திருவிழா திருப்பலி நடைபெற்றது. சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதன் பின்னர், தேர் பவனி நடைபெற்றது. இதில் விண்ணேற்பு ஆண்டவர், அன்னை மரியாள், மிக்கேல் ஆண்டவர், அருளானந்தர் உள்ளிட்ட நான்கு சொரூப சிலைகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனியான தேரில் வைக்கப்பட்டு பவனி நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பாக மாலை, உப்பு, மெழுகுவர்த்தி, விளைந்த நெல், மிளகாய், நிலக்கடலையைப் படைத்து விண்ணேற்பு ஆண்டவரை வழிபட்டனர். இதில் பங்குத்தந்தையர்கள் அம்புரோஸ் லூயி, அமலன், மரியதுரை, மான்சிங், சார்லஸ், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.