முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர்

முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-06-03 13:11 GMT
விருதுநகரில் முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா ஆகியோர் முன்னிலையில் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் குமரி கோட்டப் பொறுப்பாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நைனார் ராஜேந்திரன் பேசுகையில், முருக பக்தர்கள் மாநாட்டில் அசம்பாவிதங்கள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகபாபு கூறியதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் முருக பக்தர்கள் மாநாட்டில் ஏதேனும் அசம்பாவிதங்களை உண்டு பண்ணுவதற்காக திமுகவினர் இருப்பதாக சந்தேகம் வருவதாகவும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பக்தியான நபர் சபரிமலைக்கு விரதம் இருந்து மாலையிட்டு சென்று வருபவர் ஆனால் அவர் பக்தி இல்லாத இடத்தில் இருந்து கொண்டு தீய எண்ணங்களில் அவர் பேசி வருவது வருந்தத்தக்கது எனவும், ஞானசேகரன் வழக்கில் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகவும் ஞானசேகரன் வழக்கில் ஒரு சார் இருப்பதாகவும் அந்த சாரை கண்டுபிடிக்க காவல்துறை தவறிவிட்டதாகவும் அந்த சாரை கண்டுபிடிக்க காவல்துறை தவறி இருக்கும் பட்சத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் அதை கண்டுபிடிப்பேன் என கூறி இருப்பது வரவேற்கத்தக்கது எனவும், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை சரிவர செயல்படவில்லை எனவும் தினசரி பாலியல் வழக்குகள் நிறைய கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாகவும் ஞானசேகரன் வழக்கை 157 நாட்களில் விரைவாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன முதல்வர் இந்த வழக்கில் எதற்காக ஆர்வம் காட்டினார் என்ன பாஜக மாநில நைனார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் விளக்கு பெற முடியாது என திமுகவிற்கு நன்றாக தெரிந்ததும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வில் விளக்கு பெற முடியாமல் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அதை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதாகவும் நீட் தேர்வில் விளக்கு பெற முடியாது என தெரிந்தும் மக்களை முதல்வர் ஏமாற்றுவதாகவும் மீண்டும் நீட் தேர்வை விளக்க அளிக்க வேண்டும் என கூறினால் அதை எப்படி ஆளுநர் அனுமதிப்பார் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களும் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதாகவும் ஆனால் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் வேண்டாம் முதல்வருக்கு தான் வேண்டும் என தீர்மானம் ஏற்றுவதாகவும் இப்படி நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது தான் திராவிட முன்னேற்ற கழகம் என விமர்சித்தார்

Similar News