சாலை விபத்தில் முறுக்கு வியாபாரி பலி
திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் வியாபாரி பலியான நிலையில் போலீசார் விசாரணை;
மதுரை மாவட்டம், மணல்மேட்டுபட்டியை சேர்ந்தவர் மாயழகன் (வயது 62). இவர் முன்னாள் அரசு பேருந்து பணிமனை மெக்கானிக் ஆவார். இவர் வீட்டிலேயே சொந்தமாக முறுக்கு அதிரசம் போன்ற தின்பண்டங்கள் தயார் செய்தும், வெளியில் இருந்து வாங்கியும் அவற்றை மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். வழக்கம்போல் மணல்மேடுப்பட்டியில் இருந்து தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை பொன்னமராவதி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்ய ஆம்னி வேனை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது எஸ்.வி.மங்கலம் கிழக்குப்பட்டியில் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓடிய ஆம்னி வேன் புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்