சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கொடியேற்றுவிழா

திராவிடர் கழகம்;

Update: 2025-06-05 10:13 GMT
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர்கழக கொடியேற்று விழா நாகர்கோவில் ஒழுகினசேரியில் இன்று நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கி திராவிடர்கழக கொடியினை ஏற்றிவைத்தார். திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, செயலாளர் எம்.பெரியார் தாஸ், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் பகுதி தலைவர்கள் ச.ச.மணிமேகலை, பா.சு.முத்து வைரவன், த.தங்கவேல் ,ம.செல்வராசு பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்

Similar News