அங்கன்வாடி மையத்தில் சேர்க்கைக்கு குழந்தைகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு

ஆரணி, பெரணமல்லூர் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.;

Update: 2025-06-06 05:29 GMT
ஆரணி, பெரணமல்லூர் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை செய்ய வரும் குழந்தைகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை செய்வதற்காக அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தை திட்டஅலுவலர் கண்ணகி அறுவுறுத்தலின்படி மேற்பார்வையாளர் கீதா தலைமையில் இரண்டு வயது நிறைவடைந்த குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் பெயர் சேர்த்தல் நிகழ்ச்சிக்கு மேள தாள மங்கள வாத்தியங்களுடன் வரவேற்பு நடைபெற்றது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News