மன விரக்தியில் மாணவர் தற்கொலை

மதுரை அழகர் கோவில் அருகே படிப்பு ஒழுங்காக வரவில்லை என்ற விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-06-10 08:14 GMT
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே காதக்கிணற்றைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளரின் 15 வயது மகன், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.இவர் 'பாடங்கள் அதிகமாக இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை' என பெற்றோரிடம் பலமுறை கூறி வந்த நிலையில் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, அவரது அறையிலேயே அங்கேயே துாங்க ஆரம்பித்தார். நேற்றுமுன்தினம் (ஜூன் .8) பெற்றோர் கோயிலுக்கு சென்ற நிலையில் அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவரது இறப்பு குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News