பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (87). இவர் கடந்த வாரம் அவரது உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். கும்பக்கரை சாலையில் பைக்கில் சென்றபோது ஆடு குறுக்கே புகுந்தால் நிலை தடுமாறி பைக் கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ராமர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஜூன் 9) அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.