உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (27). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் பெரியகுளம் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் பாலமுரளி என்பவர் ஓட்டி வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் படுகாயம் அடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேனி போலீசார் பாலமுரளி மீது நேற்று (ஜூன் 9) வழக்கு பதிவு செய்தனர்.