விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சை பலனின்றி படி

மதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த நபர் நேற்று உயிரிழந்தார்.;

Update: 2025-06-13 03:53 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டியைச் சேர்ந்த கல்லுச்சாமி( 40) என்பவர் கடந்த ஜூன் 8 ல் சோழவந்தான் அருகே சின்ன இரும்பாடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பும் போது ராயபுரம் அருகே தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் . இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News